Monday 29 July 2013

இராஜராஜனின் தாயார் அகமுடையார்(மலையமான்) இனத்தை சார்ந்தவர்

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அகமுடையார் இனத்தினர் பரவலாக வாழ்ந்து வருகின்றனர். தென்தமிழகத்தில் அகமுடையார்களை முக்குலத்தோர் பிரிவுகளில் ஒன்றாகவும் கருதி வருகின்றனர். வட தமிழகத்தை பொறுத்தவரையிலும் அகமுடையார் இனத்தினர் தனித்தே அடையாளப்பட்டு வருகின்றனர். பெரும்பாலும் அகமுடையார் இனத்தினரின் பட்டங்களையும், பட்டப் பெயர்களையும் வைத்து பலவாறு தமிழகம் முழுவதும் சிதறிக் கிடக்கின்றனர்.
தென் தமிழகத்தில் அகமுடையார்களை சேர்வை என்றும் மேலும் முதலியார், பிள்ளை என்ற பட்டங்களுடன் வட தமிழகத்திலும், தேவர், பிள்ளை, அதிகாரி, நாயக்கர், தேசிகர் போன்ற பல பட்ட பெயர்களுடன் மத்திய தமிழகத்திலும் அறியபடுகின்றனர். அகமுடையருக்கு என்னிறைந்த விருது பெயர்கள் உண்டு:

உடையார், முதலி, மலையான் ,வானவன் ,வானவராயன், வல்லவராயன், பனந்த்தாரன், பொறையான், மலையமான் ,தலைவன், படையாட்சி ,மனியக்காரான், பூமியன், கோளன், வர்மா, நாகன், பாண்டியன், கொங்கன், அம்பலம், சேர்வை, நாட்டான்மை, தொண்டைமான், தேவர் ,என்பது போல பல பட்டங்கள கான படுகின்றனர். அகமுடையாரது பின்னனி பெரும்பாலும் சேர மன்னரையே பின்பற்றியது. இதை பதிற்றுபத்து போன்ற சேரர் புகழ்பாடும் இலக்கியங்ககளும் மெய்பிக்கின்றன.
கல்வெட்டுகளில் அகமுடையாரை பற்றிய கல்வெட்டு சின்னமனூர் கல்வெட்டில்,
“பிள்ளை குலசேகர மாவலி வானாதிராய அகம்படிய முதலி சிங்க தேவன் ” என்று குலசேகர மாவலி வானதிராயரை பற்றி குறிப்பிடுகிறது.

யார் இந்த வானாதிராயர்?

வானர் என்ற மன்னர்குலத்தோர் புகழ பெற்ற சேர மரபினர் ஆவார். மூவேந்தருடனும் மன உறவு பூண்டவர்.கரிகால சோழனின் மனைவியும் வானர் குல பென்மனி, ராஜ ராஜனின் அக்காவின் கனவருமான் வந்திய தேவர் இந்த வானதிராயர் குலத்தாவர்.
சேரனுக்கு வானவன்,மலையன்,வானவரம்பன் என்ற பெயர்கள் உண்டு. வானவன் (அ) வானவரம்பன் என்ற சொல்லுக்கு வானை முட்டும் மலையினை உடையவன் என்று பொருள்.
சேரன்- மலை நாட்டிற்க்கு சிகரத்தை போன்றவன். சிகரன் எனற வார்த்தை மலை நாட்டின் தலைவன் என்று பொருள். இதிலிருந்து அகமுடையார் பிறப்பால் சேரர்கள் என்று புரியும்.
வானர்கள் மகாபலி சக்கரவர்த்தியின் இனத்தை சார்ந்தவர்கள் என்று கல்வெட்டுக்கள் கூறுகிறது. மகாபலி பிற்பிறவியில் இந்திரன் ஆவார். இந்தியப் புராணங்களில் முக்கியமான ஓர் வேந்தன் மகாபலி ஆவான். சேர நாட்டில் இருந்து மகாபலி மன்னன் துளு மொழி வழங்கிய கர்நாடகக் கடற்கரைப் பகுதி வரை ஆண்டதாகவும்க கூறப்ப்டுகறது.
இவர் சேர வம்சத்தை சார்ந்ததாகவும் அதனால் தான் இன்றும் மலையாள தேசத்தில் கொண்டாடுகின்றனர்.
இவரை அசுர மன்னனாக திரித்து கூறியது சேரர்கள் மேல் படை எடுத்த திபேத்திய பிராமனர்களால்(நம்பூதிரிகள்) புனையபட்ட பொய் கட்டு கதையே ஆகும்.

வாமன அவதாரம் எடுத்து, விஷ்ணு இம்மன்னனை பாதாள உலகிற்கு அனுப்பியதாகவும் புராணங்கள் குறிப்பிடுகின்றன. மகாபலி பாதாள உலகத்துக்கு அனுப்பப்பட்ட நாளாகிய ஆவணி மாத திருவோண நட்சத்திர நாளை விழாவாகக் கொண்டாடுகின்றனர். அன்றைக்கு ஒருநாள் மட்டும் மகாபலி தமது நாட்டைப் பார்வையிட்டுவிட்டு மீண்டும் பாதாள உலகம் சென்றுவிடுவதாக கருதப்படுகிறது. இந்த ஓண நாளை ‘வாமன ஜெயந்தி’ என்று இந்து மதப் புராணங்கள் குறிப்பிடுகின்றன.
சிவகங்கை சீமையில் உள்ள மானாமதுரை(வானாதிராய மதுரை),இராசகம்பீரம்(வானராய கம்பீர கோட்டை) முதலிய இடத்தில் வானாதிராய இனமாக ராஜ குல அகமுடையரே அதிகமாக வாழ்கிறனர். சின்னமனூர் அகமுடைய பனந்தாரன்(வானாதிராயன்),பந்தளம்(அகமுடைய பனந்தார ராம வர்மா)[சுவாமி ஐய்யப்பன் வழி வந்த மன்னர் போன்றவர்கள் பனந்தார வம்சத்து அகமுடையரே.இருவருக்கும் இன்னும் திருமன உறவு உண்டு.கொங்கு நாட்டில் உள்ள சமத்தூர் ஜமீந்தார் வானவராயர்,வல்லவராயர்(எஜமான் திரைபடத்தில் வரும் கதாபாத்திரங்கள்) யாவரும் அகமுடைய குல கவுண்டர்கள் ஆகும். வானாதிராய சேர அரச வம்சமானதால் தான் அகமுடையார் தம்மை ”ராஜகுல அகமுடையார்’ என்று குறிப்பிட்டுக்கொள்கிறார்கள்.
இவர்களுக்குஆதியிலிருந்துசேரன்,மலையன்,வானவராயன்,மலையமான்,மலைராயன்,வானகோவரயன்,மலைராயன்,குறு வழுதி, மகதை நாடாழ்வான்,செம்பை நாயகன்,பொன் தின்னன் முதலிய பல பெயர்களால் அழைக்கபட்டனர்.

மலையமான்:

மலையமான் திருமுடிக்காரி,தெய்வீகன் என்ற தேர்வீகன்,சோழியவேனாதி திருக்கண்ணன்,மலையமன்னர் நரசிங்க முனையரையர்,நத்தமன்னர் மெய்ப்பொருள் நாயனார்,சுருதிமன்னர் குலசேகரன்,மலையன்,தேர்வண் மலையன்,வேள் பாரி, கிளியூர் மலையமான் பெரியுடையானான இராஜராஜச் சேதிராயன்,கிளியூர் மலையமான் ஆகாரசூரனான இராஜகம்பீரச் சேதிராயன்,பாண்டியராய திரணி சுருதிமான்,குட்டன் வனராயன் திரணி சுருதிமான்,நுணாங்குறிச்சி சுருதிமான் அணஞ்சா ஆனைவிடப்பாடி,ஊற்றத்தூருடைய சுருதிமான் சனனாதர் அரைய தேவனான வாண விச்சாதிர நாடாழ்வான்.
போன்ற எண்ணற்ற வேளிர்களையும்,அரசர்களையும் கொண்ட அரச குடும்பமே பார்க்கவகுலம். வல்வில் ஓரியை போரில் கொன்றவர் மலையமான் திருமுடிக்காரி. ஓரி அதியமான் குலமாக கூறப்பட்டாலும் அதியமான்களும் மலையமான் பட்டத்துடனேயே ஆண்டுள்ளனர். அரசர்களாகவும்,வேளிர்களாகவும் இருந்த காலத்தில் முனையரையர்,மலையமான்,கொங்கராயர்,சேதிராயன், மிலாடுடையார்,மலாடுடையார்,நத்தமான்,சுருதிமான்,உடையான், மலையமான்,சேதிய ராயன்,வன்னிய நாயகன்,பாண்டியராயர், கோவலராயர்,வாணகோவரையன்,சற்றுக்குடாதான்,காடவராயன்,(காடவர்களை ஆண்டவன்)பல்லவராயர்,அரைய தேவன்,நாடாழ்வான் போன்ற பட்டங்களுடன் ஆண்டு வந்தவர்கள்.
மலையமான்,நத்தமான்,சுருதிமான்,இம்மூவரும் அரசன் என்று பொருள் படும் உடையார் என்ற பொதுப்பட்டம் கொண்டவர்கள்.(சுருதிமான்)மூப்பனார் என்ற பட்டம் குல முதல்வர் (HEAD MAN)கத்திரியர்,கத்திக்காரர் என்ற படை பயிற்றுனர் என்ற அர்த்தத்தையும்,நயினார்,என்றபட்டம் சமண மதத்தைத்தழுவியவர்கள் அல்லது நாயன்மார் (மெய்ப்பொருள் மன்னர்)என்ற அர்த்தத்தையும் கொண்டது.உடையார் என்பதின் உட்பிரிவு பட்டங்களே மேற்காண்பவர்கள்.
(கன்னட,தெலுங்கு பேசும் உடையார்கள் என  உடையார் பட்டம் கொண்டு பலர் இருப்பினும்,பார்க்கவ குலத்தாருக்கு ஆதியிலிருந்தே  உடையார் பட்டம் மலைநாட்டு  அரசன் என்ற பொருளில் மலாடுடையார் என்ற பொருளில் வந்துள்ளது.மேற்கண்டோருக்கும் பார்கவ குலத்தாரோடு எத்தொடர்பும் கிடையாது. அதே போல பிருகு வம்ச பார்க்கவராகிய சுக்கிராச்சார்யரை குல குருவாக கொண்ட(மாபலி)சேர மன்னரின் வழிவந்த மலையமான் குலத்தவரான இவர்களும் சத்திரிய மரபுப்படி பார்க்கவ கோத்திரமாக கூறிக்கொள்கின்றனர்.

அகமுடையாரும் மலையமானும் ஒரே சேர வம்ச வழியினர்:

அகமுடையார் தம்மை ராஜ குல அகமுடையர் என்றும் தம்மை மகாபலி வம்ச வழியினர் எனவும் கூறுகன்றனர். மலையமான் இனத்தவர்கள் தம்மை மாபலி வம்சத்தவர் என்றும் மகாபலியின் குருவான சுக்ராச்சார்யரின்(பார்க்கவன்) பெயரால் பார்க்கவ குலத்தவர்கள் என்று கூறுகன்றனர்.
இதற்க்கு அவர்கள் கூறும் காரனம்,
அதே போல பிருகு வம்ச பார்க்கவராகிய சுக்கிராச்சார்யரை குல குருவாக கொண்ட(மகாபலி)சேர மன்னரின் வழிவந்த மலையமான் குலத்தவரான இவர்களும் சத்திரிய மரபுப்படி பார்க்கவ கோத்திரமாக கூறிக்கொள்கின்றனர்.
இதை மெய்பிக்கும் வித்மாக பார்க்கவகுலத்தவர்கள் அகமுடையாராக வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது, பார்கவ குலத்தார் வானவன்,சேரன்,மலையன் என்றும் குடிப்பெயருடைய மலையமான்களின் நேரடி வம்சத்தாராகவும் பாரி மற்றும் மூவேந்தரின் பெண்ணடி வாரிசாகவும் உள்ள குடும்பத்தினர்கள். காளியை குலதெய்வமாக கொண்ட போர் மறவர் குலமான இவர்கள் சோழர்களுக்கு அநேக வெற்றிகளைப்பெற்றுத்தந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன.
சோழனது படை பலமாக விளங்கிய போர்க்குடிகளில்  மலையமான் இனம் முதன்மையானது மன்னர்காலத்திற்கு பின்னர் போர்க்குடியினர் அனைவரும் விவசாயத்தில் ஈடுபட்டனர் என்னும் காலமாற்றத்திற்கு ஏற்ப இவர்களும் விவசாய குடிகளானார்கள்.குறுநில மன்னர்கள், வேளிர்கள்,போர் மறவர்கள் ஆகிய இவ்வினத்தார் ஜமீன்களாகவும்,பண்ணையார்களாகவும் மாறினர். வட தமிழகத்தில் மன்னர் ஆட்சி முடிவுற்ற வேளையில் ஊர்க்காவலையும்,போரையும்தவிர வேறு தொழில் அறியாத காரணத்தால்,அப்போது மன்னராட்சி நடை பெற்ற திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு  பார்கவ குல சுருதிமான்களான உடையார் குல மூப்பனார்கள் கத்திக்கார படைவீரர்களாக(கத்திரியர்கள்) அகமுடையாராக பணி புரிய சென்றனர்.அவ்வாறு சென்ற பார்கவ குல சுருதிமான்களின் வாரிசுகள் இன்றைக்கும் திருநெல்வேலி,கன்னியாகுமரி,ராம்நாடு,மதுரை போன்ற பகுதிகளில் வாழ்கின்றனர்.
அவர்களை இன்றைக்கும் அவ்விடங்களில் கத்திக்கார மூப்பனார்கள் என்று பட்டமிட்டு அழைக்கப்படுவதைக்காணலாம்.மூப்பனார்கள் பதினாறாம் நூற்றாண்டு வரை சோழ நாட்டின் அகமுடைய மறவர்களாக,தளபதிகளாக,குறுநில மன்னர்களாக இருந்துள்ளார்கள் என்பதை சுருதிமான்களைப்பற்றிய கல்வெட்டுக்கள் மூலம் அறியலாம்.

ராஜராஜ சோழனின் தாயார் அகமுடையார்(மலையமான்) இனத்தவரே

: பாண்டியபுரம் என்ற ஊரில் ஆண்டிமலை என்ற இடத்தில் உள்ள பாறையில் கி.பி.953 ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட கல்வெட்டில் உள்ள செய்தி, “பாரிமகளிரின் பைந்தொடி முன்கை பிடித்தோர் வழி வரு குரிசில் சித்தவடவன்”என்பதாக அமைகிறது,பாரி மகளிரை மணம் செய்தவர்களின் வழி வந்த அரசன் சித்தவடவன் என்கிறது செய்தி.இவரது மகளான வானவன் மாதேவி என்பவர் தான் தஞ்சையை ஆண்ட சுந்தர சோழனின் மனைவி,ராஜராஜ சோழனின் தாயார். பாரிமகளிரின் பைந்தொடி முன்கை பிடித்தோர் வழி வரு அகமுடையார்(மலையமான்) மட்டுமே.
“முத்தமிழ்க் கபிலன் மூரி வெண் தடக்கைப் பாரிதன் அடைக்கலப் பெண்ணை மலையர்க்கு உதவி” –எனத்தொடங்கும் இராசராச சோழன் கல்வெட்டும் கூறும் பாரி வம்சமாக அறியப்படுபவர்கள் பார்கவ குல சத்திரியர்கள் மட்டுமே..
சுந்தர சோழன் இறந்தவுடன் அவரோடு சேர்ந்து உடன்கட்டை ஏறியவர் பார்கவ குல மலையமானின் மகளான வானவன் மாதேவி.க்ஷத்ரியப்பெண்கள் மட்டுமே உடன் கட்டை ஏறுதல் வழக்கம்.இன்றைக்கும் நத்தமான்,சுருதிமான்,மலையமான் பரம்பரையினர் பார்க்கவ குல க்ஷத்ரியர் என்று அழைக்கப்படுகின்றனர்.சோழர்களில் சுந்தர சோழனுக்கும் இரண்டாம் ராஜராஜனுக்கும்மலையமான் மகள் அவனிமுழுதுடையாள்)பெண் கொடுத்த இவர்கள் மூவேந்தரோடும்,வேளிர்களோடு மண உறவு கொண்டுள்ளனர்.
பார்க்கவ குல க்ஷத்ரியர்(மலையமான்) என்பரும் அகமுடையாரும் ஒன்றே. எனவே ராஜராஜ சோழனின் தாயார் அகமுடையார்(மலையமான்) இனத்தவரே
நன்றி : செம்பியன் மறவன்

2 comments:

  1. அண்ணா அப்போ பார்க்கவ குலமும்,
    அகமுடையாரும் ஒன்றா...

    ReplyDelete
  2. Need a Debt Loan To Pay Off Bills?
    Take control of your debt today
    Available Now Business Expansion Loan Offer?
    Do you need a loan to pay off Bills?
    Do you need a loan?
    Do you need Personal Loan?
    Business Expansion Loan?
    Business Start-up, Education,
    Debt Consolidation Loan
    Hard Money Loans
    Loan for any thing ?
    We offer loan at low interest rate of 3%
    Loan with no credit check,
    Email us: financialserviceoffer876@gmail.com
    Call or add us on what's app +918929509036

    ReplyDelete