Saturday 12 November 2011

ரூ. 2 கோடி செலவில் திருமண மண்டபம்: அடிக்கல் நாட்டி பூமி பூஜை

ராமநாதபுரம், அக். 28: ராமநாதபுரம் அருகே சாத்தான்குளம் கிராம பஸ் நிறுத்தத்தில் ரூ. 2 கோடி மதிப்பில், அகமுடையார் சங்கம் சார்பில் மருதுபாண்டியர்கள் பெயரில் திருமணம்  மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா மற்றும் பூமிபூஜை வெள்ளிக்கிழமை  நடைபெற்றது.

 விழாவுக்கு, மாமன்னர் மருதுபாண்டியர் அறக்கட்டளையின் தலைவர் எம். வீராச்சாமி தலைமை வகித்தார்.

 அகமுடையார் சங்க மாவட்டச் செயலர் எம். வேல்முருகன், மாவட்டப் பொருளாளர் ஆர். ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் டி.ஆர்.எஸ். அய்யனார் வரவேற்றார்.

 சங்கத்தின் மாவட்டத் தலைவர் பாம்பன் என். ராஜாஜி மருதுபாண்டியர் படத்தை  திறந்துவைத்து, அடிக்கல் நாட்டி, பூமி பூஜைகளைச் செய்தார்.

 பின்னர், அறக்கட்டளைத் தலைவர் எம்.வீராச்சாமி தெரிவிக்கையில், ரூ. 2 கோடி  செலவில் பல்வேறு சிறப்பு வசதிகளுடன் இம்மண்டபம் விரைவில் கட்டி முடிக்கப்பட இருப்பதாகத் தெரிவித்தார்.

 விழாவில் பட்டணம்காத்தான் ஊராட்சிமன்றத் தலைவர் சித்ராமருது, முன்னாள்  ஊராட்சிமன்றத் தலைவர் குப்புராம்ஜி,சங்க நகர் தலைவர் குருசாமி,டி.கே. ஜூவல்லர்ஸ் உரிமையாளர் டி.கிருஷ்ணசாமி, பாம்பன்,எஸ். பாலா,வி,கே. ரமேஷ்,  பாம்பன் எஸ். பாலா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment