Saturday 12 November 2011

மருதுபாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து அகமுடையார் சங்க நிர்வாகிகள் அஞ்சலி

ராமநாதபுரம், அக். 24: ராமநாதபுரம் அருகேயுள்ள வாலாந்தரவை கிராமத்திலிருக்கும் மருதுபாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து அகமுடையார் சங்க நிர்வாகிகள் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
 ராமநாதபுரம் மாவட்ட அகமுடையார் சங்கத் தலைவர் பாம்பன் என்.ராஜாஜி தலைமையில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வேல்முருகன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் டி.ஆர்.எஸ். அய்யனார், மருதுபாண்டியர் அறக்கட்டளை தலைவர் வீராச்சாமி, வாலாந்தரவை கிராமத் தலைவர் விஸ்வநாதன், தர்மா ஆகியோர் மருதுபாண்டியர்கள் 210வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 பின்னர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாம்பன் என்.ராஜாஜி கூறியதாவது:
 மருது சகோதரர்கள் நினைவு தின விழா, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அரசு
 விழாவாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை நினைவுகூரும் வகையில் மருதுபாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தோம்.
 இம்மாதம் 27 ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள மருதுபாண்டியர் நினைவிடத்தில் ராமநாதபுரத்தை சுற்றியுள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட வேன்களில் சென்று அஞ்சலி செலுத்த இருக்கிறோம். மறுநாள் 28 ஆம் தேதி மருதுபாண்டியர்
 திருமண மண்டப அடிக்கல் நாட்டு விழாவும் ராமநாதபுரத்தில் நடைபெற இருக்கிறது என்றார்.
 அப்போது அகமுடையார் சங்க மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment