Saturday 12 November 2011

பரமக்குடியில் மருதுபாண்டியர் குருபூஜை

பரமக்குடி, அக். 27: மாமன்னர் மருதுபாண்டியர்களின் 210-வது குருபூஜை விழா பரமக்குடி நகர் மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் வியாழக்கிழமை நடைபெற்றது.
 குருபூஜை விழாவை முன்னிட்டு சந்தைக்கடைத் தெருவில் எஸ்.ராமமூர்த்தி தலைமையிலும், காமராஜர் நகர், திருவள்ளுவர் நகர், மருதுபாண்டியர் நகர் ஆகிய பகுதிகளில் சுபாஷ் சந்திரபோஸ், தடா கண்ணுச்சாமி ஆகியோர் தலைமையிலும் மருதுபாண்டியர் உருவம் பொறித்த அகமுடையர் நலச் சங்கக் கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினர்.
 பின்பு, மருதுபாண்டியர்களின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பரமக்குடி நகர் மற்றும் மருதுபாண்டியர் நகர், திருவள்ளுவர் நகர், மலையான் குடியிருப்பு, பர்மா காலனி, தெளிச்சாத்தநல்லூர், பாண்டிக் கண்மாய், எமனேஸ்வரம், அக்கரமேசி, இலந்தைக்குளம், கமுதக்குடி, வாகைக்குளம், கொழுவூர் உள்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெரியோர்கள் காளையார்கோவிலில் உள்ள மருதுபாண்டியர்களின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினர்.
 முன்னதாக, போலீஸôரின் தடை உத்தரவால், மருதுபாண்டியர்களின் குருபூஜைக்கு வழக்கமாக வைக்கப்படும் டிஜிட்டல் போர்டுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் நகர் மற்றும் கிராமங்களில் பதற்றம் நிலவியது. இதனைத் தொடர்ந்து போலீஸôரின் பலத்த பாதுகாப்புடன் அஞ்சலி செலுத்துவோரின் வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன.

No comments:

Post a Comment