Saturday 12 November 2011

மருதுபாண்டியர் குருபூஜை விழா: தலைவர்கள் அஞ்சலி

மானாமதுரை, அக். 27: சிவகங்கை மாவட்டம், காளையார்கோயிலில் உள்ள மருதுபாண்டியர் நினைவிடத்தில் புதன்கிழமை நடைபெற்ற குருபூஜை விழாவில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அகமுடையார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
 புதியபார்வை ஆசிரியர் நடராஜன் மருதுபாண்டியர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து மதுரை ஆதீனம், மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் ஸ்ரீதர் வாண்டையார், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனர் டாக்டர் என். சேதுராமன், முன்னாள் அமைச்சர்கள் பொன் முத்துராமலிங்கம், சுப.தங்கவேலன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், அரசியல் கட்சியினர் மருது நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தினர்.
 பல்வேறு இடங்களிலிருந்து அகமுடையார் சமூகத்தினர் வேன், கார்களில் காளையார்கோயிலுக்கு வந்து மருதுபாண்டியர் நினைவிடத்தில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மருதுபாண்டியர் குருபூஜை விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்புப் பணியில் போலீஸ் ஈடுபட்டிருந்தனர்.

No comments:

Post a Comment